×

செண்பகராமன்புதூரில் மாட்டுவண்டி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்கு


நாகர்கோவில், ஜன. 18:  மாட்டுப்பொங்கலையொட்டி நேற்று முன்தினம் செண்பகராமன்புதூர் இலந்தை இளைஞர் இயக்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் 27வது ஆண்டு பொங்கல்விழா மற்றும் மாநில அளவிலான மாட்டுவண்டி போட்டி நடந்தது. இதில் பல மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மாட்டுவண்டி போட்டி நடத்துவதற்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீசார் மாட்டுவண்டி போட்டி நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். செண்பராமன்புதூர் இலந்தை நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சுகாஷ்குமார், பாபு, பரமேஸ்வரன், கார்த்தி(23) மற்றும் சிலர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags : cavalry contestants ,Shenbagaram Rampur ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...