கழுகுமலை, ஜன.18: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கயத்தார் மேற்கு ஒன்றியம், கழுகுமலை பேரூர் திமுக சார்பாக காளவாசல் பஸ்நிலையம் அருகிலுள்ள கொடிகம்பத்தில் மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுக கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, கழுகுமலை பேரூர்செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன், பேரூர் அவைத்தலைவர் கந்தசாமி, துணைச் செயலாளர் மாணிக்கம், சுப்பிரமணியன், பொருளாளர் முப்பிடாதி, வானரமுட்டி ஊராட்சி செயலாளர் மாரியப்பன், சங்கரலிங்கபுரம் சிவகுமார், வேலாயுதபுரம் ஜெயசங்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாராஜன், துணை அமைப்பாளர் மணிகண்டன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் வள்ளிநாயகம், இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துமாரி, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் துரை, வார்டு செயலாளர்கள், ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.