தூத்துக்குடி, ஜன.18: தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் அமைந்துள்ள உபமின்நிலையத்தில் நாளை 19ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ம் கேட், 2ம் கேட், மட்டக்கடை, பீச்ரோடு, தெப்பக்குளம், சிவன்கோவில்தெரு, டபுள்யூ.ஜி.சி.ரோடு, ஜார்ஜ் ரோடு, வி.இ.ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள்காலனி, கே.டி.சி.நகர், சிவந்தாகுளம் மெயின்ரோடு, தாமோதரன் நகர், குறிஞ்சிநகர், சிதம்பரநகர், பிரையண்ட் நகர், சுப்பையா முதலியார்புரம் ஆகிய பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படுகிறது. முத்தையாபுரம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (19ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின் நகர் பகுதி, கேம்ப்-1 சுற்றியுள்ள பகுதிகள், கேம்ப்-2, தோப்பு தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமி நகர், சவேரியர்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது
ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டப்பிடாரம், ஓசனூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியாபுரம் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.