செய்துங்கநல்லூர், ஜன.18: மருதூர் அணையில்காணும் ெபாங்கலைமுன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தாமிரபரணி அணைக்கட்டில் மிக நீளமான தடுப்பணை மருதூர் அணை, இந்த அணையில் காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அவர்கள்அணையில் குளித்து, அணைக்கட்டில் குழுவாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். தூத்துக்குடி, நெல்லை உள்பட பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள்குவிந்தனர்.ெதாடர்ந்து காணும் பொங்கலைகுதூகலத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.