கோவில்பட்டி, ஜன.18: கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும், வேலாயுதபுரம் ரயில்வே கேட்டிற்கும் இடைபட்ட பகுதியில், தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசார் மற்றும் கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் கோவில்பட்டி முத்துநகர் ஆறுமுகச்சாமி மகன் செல்லப்பாண்டியன்(28) என்பது தெரியவந்தது. இதுகுறித்து
போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.