×

நெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்

திருத்தணி, ஜன. 18: திருவாலங்காடு அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. நேற்று காலை தம்பதி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்றனர்.  சிறிது நேரத்தில் அவரது குடிசையில் இருந்து கரும்புகை வெளியாகி குடிசை கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகவலறிந்து ராஜ்குமாரும், ஈஸ்வரியும் ஓடிவந்து, பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை கொண்டு அரைமணி  நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்து துணிமணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகியது. இந்த சம்பவம் தொடர்பாக திருத்தணி வருவாய் துறையினர் வந்து விசாரணை  மேற்கொண்டனர்.


Tags : village ,Nemili ,cottage ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...