×

சமத்துவ பொங்கல் விழா

திருக்கழுக்குன்றம், ஜன.18: கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஐந்துகாணி இருளர் குடியிருப்பு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.  விழாவிற்கு வாயலூர் முன்னாள் தலைவர் கிங் உசேன் தலைமை தாங்கினார். புதுப்பட்டினம் ஊராட்சி முன்னாள் தலைவர் கவிஞர் கலியபெருமாள், திருக்கழுக்குன்றம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரவணன்,  ஓய்வு பெற்ற பேராசிரியர் குமார்,  புதுப்பட்டினம் வியாபாரிகள் சங்கத் தலைவர் காதர்உசேன், லயன்ஸ் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் போது இருளர் இன மக்களோடு அனைத்து மதத்தினரும் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.   விழாவில் சிறப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏ தனபால் சமத்துவ பொங்கல் குறித்து சிறப்புரையாற்றினார்.  இதில் சமூக சேவகி காயத்ரி தனபால், பன்னீர்செல்வம்,  ராஜேந்திரன், சார்லஸ், திருவள்ளுவன்,  முருகன், வீரன், சதாம்உசேன், சாலமன், ஆறுமுகம், நூருல்லா,மோகன், ஷெரீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags : Equality Pongal Festival ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா