காஞ்சிபுரம், ஜன. 18: காஞ்சிபுரம் அருகே சாலபோகம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோ நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் எம்பி விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார். பேஷன் என்ற போர்வையில் பெண்கள் அரைகுறை ஆடைகள் அணிந்து கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதை தவிர்க்கும் வகையில் இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டது. இப்போட்டியில் ஆண்கள், பெண்கள்பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் அருகே சாலபோகம் கிராமத்தில் பொங்கலையொட்டி இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சைக்கிள் மற்றும் தடகள போட்டிகள், கிச்சன் கில்லாடி உறியடித்தல் கோலப்போட்டி விவசாய நண்பர்களுக்கு விழா வேலைவாய்ப்பு பற்றி விழிப்புணர்வு விளையாட்டுகள் என கிராமத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கிராம இளைஞர்கள் பெண்கள் என கலந்து கொண்ட பேஷன் ஷோ நடத்தப்பட்டது. இக்கிராமத்தில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு 12ம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் எம்.பி விசுவநாதன் ரூ.60 ஆயிரம் பரிசளித்தார்.இந்த விழாவில்
கோபால், அருண் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.