×

இலவச ஸ்கூட்டருக்கு 25க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், ஜன.18: 2018-19ம் ஆண்டுக்கான அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் மகளிருக்கு 50 சதவீத மானியத்துடன் பைக் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் 3349 மகளிருக்கு அம்மா இரு சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட உள்ளது. எனவே, நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளை சேர்ந்த 18 வயது முதல் 40  வயதுக்கு மிகாமல் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிப்பவர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும். ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.  வரும் 25ம் தேதி  மாலை 5 மணிக்குள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ, பேரூராட்சி அலுவலகத்திலோ மற்றும் நகராட்சி அலுவலகத்திலோ நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை 044-27236348 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...