×

200 பேருக்கு ேவஷ்டி சேலை

காஞ்சிபுரம், ஜன.18:காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிள்ளையார்பாளையம், கிருஷ்ணன் தெரு தென்கோடியில் பொங்கல் விழா நடைபெற்றது.இந்த விழாவுக்கு காஞ்சிபுரம் நகர செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்டத் தலைவர் ஜி.வி.மதியழகன் கலந்துகொண்டு 100 பேருக்கு வேட்டி, சேலை பொங்கல் பரிசாக வழங்கினார்.  

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர்கள் பிரபாகரன், சடையாண்டி, பொருளாளர் வீரபத்திரன், நகர தலைவர் இராம.நீராளன், மாவட்ட  பொதுச்செயலாளர் லோகநாதன், வட்டாரத் தலைவர்கள் சம்பத், தென்னேரி சுகுமார்,  காஞ்சிபுரம் அன்னை லயன்ஸ் சங்கத் தலைவர் முத்து, நிர்வாகிகள் சுகுமாரன், சந்தானம், பிரதீபா, குப்புசாமி, முனுசாமி, பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...