×

சொத்து தகராறில் கல்லூரி மாணவியை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு

தாரமங்கலம், ஜன.11: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே வனிச்சம்பட்டி மேல்காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் முருகன் (50). இவருடைய தாய் ஆராயி (70). இவர்களுக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நங்கவள்ளி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் முருகன் மகள் அருணாதேவி (19) பாட்டி ஆராயி வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். ஆராயியின் மூத்த மகன் அல்லிமுத்து மற்றும் அவரது மகன் விஜயகுமார் ஆகியோர், சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். அடிக்கடி சண்டை போடுவதால் தனது படிப்பு பாதிப்பதாக அருணாதேவி அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அல்லிமுத்து, விஜயகுமார் இருவரும், அருணாதேவியின் தலையில் பயங்கரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags : college students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...