×

கடத்தூர் அருகே சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு

கடத்தூர், ஜன.11:  கடத்தூர் அருகே தாளநத்தம்- சிந்தல்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.கடத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, தாளநத்தம்-சிந்தல்பாடி பிரிவு சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள், துணிக்கடைகள் அதிகமாக உள்ளது. கடையின் விளம்பர பலகைகள் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை, சாலையோரங்களிலேயே நிறுத்தி செல்கின்றனர். இதனால், இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடமும், போக்குவரத்து ேபாலீசாரிடமும், வாகன ஓட்டிகள் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadathur ,
× RELATED கலை நிகழ்ச்சிகள் மூலம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு