தஞ்ைச, ஜன. 11: தஞ்சை அருகே பந்தல் அமைக்கும் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவர் நேற்று இரவு வடக்குவாசல் சிரேஸ் சத்திரம் சாலையில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்மநபர்கள், அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர்.