×

புதுகையில் மாசு இல்லா போகி கலெக்டர் வேண்டுகோள்

புதுக்கோட்டை, ஜன.11: புதுக்கோட்டையில் மாசு இல்லா போகி பண்டிகை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை  மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நமது  முன்னோர்கள் பொங்கல் திருநாள் முன்பு வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த  தேவையில்லா பொருட்களை எரிந்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்  படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்து உள்ளனர். ஆனால். தற்போது போகி  பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம்,  ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு,  இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற  நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே போகி  பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை  பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். புகையில்லா போகி கொண்டாடுவோம், சுற்றுச் சூழலை பேணிக் காப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு