×

அரவக்குறிச்சி அருகே இந்தாண்டும் சேவல் கட்டு இல்லை

அரவக்குறிச்சி,ஜன.11: அரவக்குறிச்சி அருகே இந்தாண்டும் சேவல் கட்டு இல்லை என கிராம மக்கள் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் பல ஆண்டுகளாக சேவல் கட்டு மிக பிரபலமாக நடந்து வந்தது. ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் பேருக்கு மேல் கூடுவார்கள். இதனால் இந்த கிராமமே பொங்கள் களை கட்டும். கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு 2பேர் உயிரிழந்த காரணத்தால், அதற்கு பிறகு சேவல் கட்டு நடை பெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நடத்துவதற்கு முயற்சிசெய்யப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்க வில்லை. ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் சார்பாக சேவல் கட்டு நடத்த அனுமதி இல்லை என்று அறிவிப்பு பிளக்ஸ் வைக்கப்படும்.
இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சி என்று பல்வேறு வகையில் முயற்சித்தும் அனுமதி கிடைக்காததால், போலீஸ் பேனர் வைப்பதற்கு முன்பாகவே கிராம பொது மக்கள் சார்பாக இந்த ஆண்டு சேவல் கட்டு இல்லை என்று அரவக்குறிச்சி பள்ளபட்டி சாலையில் பூலாம் வலசு பிரிவு சாலையில் பிளக்ஸ் பேனர் கட்டப்பட்டுள்ளது.



Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா