×

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம்

தோகைமலை, ஜன.11: கரூர் மாவட்டம் தோகைமலை பஸ் நிலையம் அருகே தென்னிந்திய தொழில் சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு பொது தொழிலாளர் பாதுகாப்பு நலசங்கம், கரூர்-திருச்சி மாவட்ட விவசாய கூலித் தொழிலாளர் சங்கம் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பொது தொழிலாளர் பாதுகாப்பு நலசங்க தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் அலமேலு மங்கை, சித்ரா, அஞ்சலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் கென்னடி, ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்