கரூர்,ஜன.11: கரூர் ராயனுார் பஸ் ஸ்டாப் அருகே குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. கரூர் ராயனுார் பஸ்ஸடாப் அருகே காவிரி குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீரேற்றம் செய்யும் இந்த குழாய்களை சுற்றிலும் சிமெண்டு தளம் அமைக்கப்பட வில்லை. இதனால் இந்த இடத்தில் தண்ணீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. தண்ணீர் அதிகமாக கசியும் போது சாலையில் வழிந்தோடுகிறது. குடிநீர் வீணாவதை தடுக்க உடனடியாக நகராட்சி நிர்வாகம் சிமெண்டு தளம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.