கரூர்,ஜன.11: கரூர் பகுதியில் சின்னவெங்காயம் அறுவடை தொடங்கியுள்ளது.கரூர் மாவட்டம் ஈசநத்தம், நந்தனுார் உள்ளிட்ட கிராமங்களில் சின்னவெங்காயம் பயிரிடப் பட்டுள்ளது. தற்போது சின்ன வெங்காயம் அறுவடை செய்து வருகின்றனர். சின்ன வெங் காயத்தை வாரச்சந்தைகள் மற்றும் வேன்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். நேரடியாக விற்பனை செய்தால் கிலோவுக்கு ரூ.15வரை கிடைக்கிறது. வியாபாரிகளிடம் கொடுத்தால் ரூ.10க்கும் குறைவாகவே வாங்குகின்றனர் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் வேன்களில் வைத்து சின்னவெங்காயத்தை நகரின் பல இடங்களிலும் விற்பனை செய்கின்றனர்.