×

இரவில் விபத்தை தடுக்க ரிப்ளக்டர்கள் போர்டுகள் - வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கரூர்,ஜன.11: கரூர் வெள்ளியணை பைபாஸ் சாலையில் விபத்து தடுக்க இரவு நேரங்களில்  ரிப்ளக்டர்கள் போர்டுகள் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள்  வலியுறுத்தியுள்ளனர்.கரூர் வெள்ளியணை சாலையில் பைபாஸ் ரோடு உள்ளது. திருச்சி - கோவை பைபாஸ் சாலையில் மேம்பாலம்  அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்திற்கு கீழ் அணுகுசாலை உள்ளது. திருச்சி  மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் இந்த அணுகு சாலையின் வழியாக சென்று  வருகின்றன.
வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக இரும்பு பேரிகார்டுகள் அணுகு  சாலையின் இருபுறமும் போலீசாரால் வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில்  ரிப்ளக்டர்கள் போர்டுகள் போன்றவை இல்லாததால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.  பகல் வேளையிலும் விபத்து அபாயத்திலேயே வாகனங்கள் குறிப்பாக இருசக்கர  வாகனங்கள் செல்ல ஏதுவாக போக்குவரத்து காவலர்களை நிறுத்த வேண்டும். விபத்து  தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Rippleters ,accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...