காங்கயம்,ஜன.11: காங்கயம் அருகே வேனில் வந்து ஆடு திருடிய இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
காங்கயம் சென்னிமலை ரோட்டில் சாவடி பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் ராசன்(55). டீக்கடையுடன் பிளாஸ்க்கில் டீ போட்டு சைக்கிளில் சென்று அக்கம் பக்கதிதில் இருக்கும் கொப்பரை கள தொழிலாளர்களுக்கும் டீ சப்ளை செய்து வருகிறார். இவர் தனது கடைக்கு எதிரில் உள்ள காட்டில் 5க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று மதியம் கடையில் இருந்தபோது ஒரு வேனில் அவரது டீக்கடைக்கு முன்பு ஆடுகள் கட்டப்பட்டிருந்த காட்டுப் பகுதிக்கு அருகில் நிற்பதும் பின்னர் மெதுவாக நகர்வதுமாக இருந்தது. சந்தேகமடைந்த ராசன் உன்னிப்பாக கவனித்து பார்த்தபோது காருக்குள் 2 ஆடுகள் இருந்தது. சந்தேகமடைந்த ராசன் காருக்கு அருகில் சென்றார். உடனே கார் டிரைவர் காரை வேகமாக கிளப்பினார். உடனே சுதாரித்த ராசன் தனது சைக்கிளை காருக்கு முன்பு தள்ளிவிட்டார். சைக்கிள் காரின் முன் பகுதியில் சிக்கிக் கொண்டது. சைக்கிளுடன் கார் காங்கயம் நோக்கி அசுர வேகத்தில் பறந்தது. உடனே அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து பின்னால் பைக்குகள் மூலம் காரை விரட்டிச் சென்றனர்.