திருப்பூரில் பட்டம் விடும் திருவிழா

அவிநாசி,ஜன.11: திருப்பூரில் நேற்று பட்டம் விடும் திருவிழா தனியார் பள்ளியில் நடந்தது.திருப்பூர் 15 வேலம்பாளையம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவ,மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறுவர் விளையாட்டான பட்டம் விடும் விழாவில் பங்கேற்றனர். பள்ளிக்கு வந்த மாணவ,மாணவிகள் தங்களது வீடுகளில் செய்து எடுத்து வந்த வண்ண,வண்ண பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். மேலும் பட்டம் வடிவிலேயே நின்று அசத்தினர். நவீன கால விளையாட்டையும் தாண்டி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்ற பட்டம் விடும் விளையாட்டே சிறந்தது என்பதற்கு சான்றாக பட்டம் வடிவிலேயே இந்த மாணவர்கள்  நின்றகாட்சியை பெற்றேேர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பள்ளித்தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி, பள்ளி முதல்வர் உமாமகேசுவரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

Related Stories: