கோவை, ஜன.11: கோவை நகர், புறநகர் போலீசில் முன் நடத்தை சரிபார்ப்பு என்ற திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.in என்ற வெப்சைட்டில் போலீஸ் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்பு ெகாள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. தனி நபர் விவரம், வேலை தொடர்பான சரிபார்ப்பு, வாடகைதாரர் விவரம், வீட்டு வேலையாட்கள் விவரங்கள் இதில் காண முடியும். இந்த சேவைக்காக தனி நபர் விண்ணப்பித்திற்கு 500 ரூபாய், தனியார் நிறுவனங்களுக்கு 1100 ரூபாய் செலுத்தவேண்டும். கிரடிட், டெபிட் கார்டு மூலமாக இந்த முறையை பயன்படுத்தலாம். தனி நபர் வீட்டு முகவரி, போலீசில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் சோதிக்கப்பட்டு அவர் எதாவது குற்ற வழக்கில் ஈடுபட்டுள்ளாரா என தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பித்த 15 நாளில் போலீசில் முன் நடத்தை சரிபார்ப்பு விவரம் பெறலாம். இதற்காக பொதுமக்கள், நிறுவனங்கள் போலீஸ் ஸ்டேஷன் செல்லவேண்டிய அவசியமில்லை. போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை பெற, வெப்சைட்டில் விண்ணப்பித்து அதற்கான அறிக்கையை பதிவிறக்கம் செய்யலாம்.