இன்று மின்தடை

உசிலம்பட்டி, ஜன. 11: உசிலம்பட்டியில் மின் பகிர்மான நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. உசிலம்பட்டி பகுதிகளான உசிலம்பட்டி நகர், நக்கலப்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து, பூதிப்புரம், வடுகபட்டி, போத்தம்பட்டி, மற்றும் அதனைச்சார்ந்த உட்கிடை கிராமங்களில் இன்று காலை 9 மணிமுதல், மதியம் 2மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு உசிலம்பட்டி மின்சார செயற்பொறியாளர் பகிர்மானம் மோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: