திருமங்கலம், ஜன. 11: தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணை குழுவின் உத்தரவின்படி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட உதவி மையம் தொடக்கவிழா நேற்று நடந்தது.தலைமை ஆசிரியர் ராஜாபூபதி விளக்கவுரையாற்றினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மதுரை சார்புநீதிபதி பன்னீர்செல்வம் பேசினார்.அவர் பேசுகையில் பள்ளி மாணவியர்கள் இதனை பயன்படுத்திகொண்டு தங்களின் சட்டம் சம்மந்தமான கேள்விகளுக்கும், பிரச்னைகளுக்கும் இதில் வக்கீல்களை அணுகி பயன்பெறலாம்’ என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வித்யா, சார்புநீதிபதி முத்துகுமரன், நீதித்துறை நடுவர் பாரதி, திருமங்கலம் வக்கீல் சங்கத்தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.