மேலூர், ஜன. 11: கேபிள் டிவி வயர் சரிசெய்வதாகக்கூறி ஓட்டைப்பிரித்து நகை, பணம் கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பட்டப் பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலூர் அருகில் உள்ள தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தனியார் பஸ் டிரைவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி மேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் நேற்று தங்கள் பணிக்குச் சென்று விட்டனர்.இந்நிலையில் மதியம் இவர்கள் ஓட்டு வீட்டின் மீது ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார்.அப்பகுதி மக்கள் வீட்டின் மீது என்ன செய்கிறாய் ? என அவரிடம் கேள்வி எழுப்பினர்.