ஒட்டன்சத்திரம், ஜன. 11: ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள் அதிகரிப்பால் பயணிகள் பணம், பொருட்களை பறிகொடுப்பது தொடர்கதையாக உள்ளது.ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் பழநி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற வெளியூர் பஸ்களும் இங்கு வந்து செல்கின்றன. மேலும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் முக்கிய பஸ்நிலையமாக உள்ளது. தற்போது பழநி தைப்பூச பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.