கள்ளக்குறிச்சி, ஜன. 11:கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக கள்ளக்குறிச்சி நகர பகுதிக்கு நேற்று மாலை வருகை தந்த பிரபு எம்எல்ஏவுக்கு கள்ளக்குறிச்சி டோல்கேட் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றகழகம், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோமுகிமணியன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி பிரபு எம்எல்ஏவுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக கள்ளக்குறிச்சி நகரபகுதிக்கு சென்று பஸ்நிலையம் பகுதியில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் சிலைக்கு பிரபு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.