×

அரிவாளுடன் சுற்றிய வாலிபர் கைது

புதுச்சேரி,  ஜன. 11: புதுவை, கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார்  திலாசுபேட்டையில் ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்த போது கனகன் ஏரி அருகே இருட்டுப் பகுதியில்  சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற வாலிபரை மடக்கி விசாரித்தனர்.
  அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறவே அவரை சோதனையிட்டனர். அப்போது  அரிவாள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதை
யடுத்து அவரை கைது செய்த  போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்,  குண்டுபாளை
யம் ஆறுமுகம் மகன் விக்னேஷ் (22) என்பதும், ஏற்கனவே இவர் மீது  கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும்  தெரியவந்தது.

Tags : Ariva ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...