×

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

விருத்தாசலம், ஜன. 11: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்மாபுரம் மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டு சென்ற,  டிராக்டரை பறிமுதல் செய்து கம்மாபுரம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து டிராக்டரை ஓட்டி வந்த, கம்மாபுரத்தை சேர்ந்த கலைச்செல்வன்(22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...