ஆலந்தூர்: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஆலந்தூர், பரங்கிமலை, நந்தம்பாக்கம், மணப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்ல எலக்ட்ரிக் ஆட்டோ சேவை துவக்க விழா நேற்று காலை ரயில் நிலைய வளாகத்தில் நடந்தது.மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் நரசிம்ம பிரசாத், நம்ம ஆட்டோ திட்ட இயக்குநர் மஞ்சு மேனன் ஆகியோர் கொடியசைத்து எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை துவக்கி வைத்தனர்.அப்போது, நரசிம்ம பிரசாத் பேசுகையில், மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, இந்த எலக்ட்ரிக் ஆட்டோ சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.