நாசரேத். ஜன.11:மணிநகர் பிரசன்ன ஆலய பிரதிஷ்டை விழாவில் பேராயர் தேவசகாயம் கலந்து கொண்டார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம், நாசரேத் சேகரம் மணிநகர் சபை பிரசன்ன ஆலய 50வது பிரதிஷ்டை , 35வது அசன பண்டிகை நிகழ்ச்சி 7 நாட்கள் நடந்தது. முதல் 3 நாட்கள் இரவு 7 மணிக்கு கன்வென்ஷன் கூட்டம் நடந்தது. இதில் சென்னை அன்னனூர் குருவானவர் டேவிட் சாலமோன், சென்னை சர்வ வல்லவரின் நிழலில் ஜெபக்குழு ஊழியர் சார்லஸ் ஆகியோர் சிறப்புசெய்தி கொடுத்தனர். 4வது நாள் மாலை 6.30 மணிக்கு ஆயத்த ஆராதனையும் இரவு 8 மணிக்கு ஐ.எம்.எஸ் கலைநிகழ்ச்சியும் நடந்தது. 5வது நாள் காலை 10 மணிக்கு ஆலய பிரதிஷ்டை, திருவிருந்து, ஞானஸ்நான ஆராதனை நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவ