தூத்துக்குடி, ஜன.11:தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக சார்பில் இன்றும், நாளையும் நடைபெற உள்ள ஊராட்சி சபை கூட்டங்கள் குறித்து பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பாக அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து உண்மையை எடுத்துரைக்க திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் எனது தலைமையில் நடைபெற உள்ளது.