களக்காடு, ஜன. 11: களக்காடு ஒரேப் ஏஜி சபையில் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாகர்கோவில் தென்மேற்கு பிராந்திய மேற்பார்வையாளர் போதகர் போவாஸ் தலைமை வகித்தார். ராதாபுரம் தாலுகா தலைமை போதகர் தங்கமணி முன்னிலை வகித்தார்.
இதில் போதகர்கள் ராதாபுரம் ரமேஷ், திசையன்விளை பாக்கியநாதன், பணகுடி சுவிஷேசமுத்து வடலிவிளை ஜெயசீலன் உள்பட 20க்கும் மேற்பட்ட சபை போதகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பிரார்த்தனை நடந்தது.