திமுக கிராமசபை கூட்டம்

திசையன்விளை, ஜன. 11:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியத்தில் முதுமொத்தன்மொழி, க.புதூர், க.நவ்வலடி, கூத்தன்குழி, விஜயாபதி, கூடங்குளம் ஆகிய 6 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் விஎஸ்ஆர்.ஜெகதீஸ் தலைமை வகித்தார்.தலைமை கழக பொறுப்பாளர் குத்தாலம் கல்யாணம், கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சித்திக், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி, திசையன்விளை முன்னாள் நகர செயலாளர் ஜெயராஜ், ராஜசேகர், பாலசுப்பிரமணியன், மகேஷ்வரன், சுகந்தி, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: