சாக்கு மூட்டையில் கடத்தி மணல் விற்க முயற்சி

புளியங்குடி, ஜன. 11:  சேர்ந்தமரம்  சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வடநத்தம்பட்டி  பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையில்  மணல் ஏற்றி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர், இதே  பகுதியை சேர்ந்த குமரன்(40) என்பதும், இங்குள்ள ஓடையில்  இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. ஒரு மூட்டை  மணல் ரூ.100க்கு விற்க முயன்றது தெரிந்தது.  போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து இருசக்கர வாகனம்  மற்றும் 4 மூட்டை மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: