கல்லிடைக்குறிச்சியில் 377 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

அம்பை, ஜன. 11: அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கும் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, கல்லிடைக்குறிச்சியில் நடந்தது. முருகையா பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தார். பிடிஓ கமலகுமாரி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு, 201 பட்டதாரி பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், பட்டதாரி அல்லாத 176 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் தலா 8 கிராம் தங்கம் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூல நல அலுவலர் சரஸ்வதி, தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், முத்துலட்சுமி, முன்னாள் எம்எல்ஏ சக்திவேல்முருகன், அம்பை அர்பன் வங்கி துணை தலைவர் பிராங்கிளின், அதிமுக மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, இளைஞர் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன், நகர செயலாளர்கள் சங்கர நாராயணன், அறிவழகன், கண்ணன், ராமையா, மாநில பேச்சாளர் மீனாட்சி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் முத்தையா, தொடக்க வேளாண் வங்கி இயக்குநர் விஜயபாலாஜி, வழக்கறிஞரணி ராஜசேகர், பழனிகுமார், ராமையா, சேக்மைதீன், முத்துக்குமார், பாபு, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிடிஓ விஜயசெல்வி நன்றி கூறினார்.

Related Stories: