ஆற்காடு, ஜன.11: ஆற்காடு டவுன் எஸ்ஐ சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கீழ்விஷாரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள குளத்துமேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை செய்தபோது புகையிலை பொருட்களை விற்ற கீழ்விஷாரம் வேதமுனி தெருவை சேர்ந்த சுகுமார்(29) என்பவரை கைது செய்து 60 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.