ஓமலூர், ஜன.10: சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு என தனியாக ₹2 லட்சம் ரூபாய் செலவில் கழிவறை, குளியலறை கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. ஓமலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். வெளியூரில் இருந்து ஓமலூர் பகுதிக்கு வரும் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையத்தில் தனியாக கழிப்பிடம் கட்டப்பட்டது. மின்சாரம், தண்ணீர் வசதி ஆகியவை செய்து கொடுக்கப்பட்டது. கட்டப்பட்டு ஓராண்டாக திறக்கப்படாமல் உள்ளதாக தினகரனில் சுட்டிக்காட்டியதையடுத்து, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் திறந்து வைத்தார். அதன்பின் மீண்டும் பூட்டப்பட்டது.