மதுரை, ஜன. 10: மதுரை கரிசல்குளத்தைச் சேர்ந்த இளையராஜா மனைவி விஜயகுமாரி (30). இவர், பரவை காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். இவரிடம் மதுரையைச் சேர்ந்த ரபிக்ராஜா, மணிகண்டன் ஆகியோர் கடந்த சில மாதமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கு காய்கறிகள் வாங்கி கொண்டு, ரூ.20 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. பாக்கி பணம் தராமல் ஏமாற்றியுதடன் இருவரும் சேர்ந்து விஜயகுமாரியை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், கூடல்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.