ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன. 10: இந்திய மாணவர் சங்கம் சார்பில், மதுரை அவுட் போஸ்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும்.  மாணவர் பேரவை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு  நிர்வாகி வேல்தேவா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் நிருபன், மாவட்ட துணைச்செயலாளர் பாலா, மாவட்ட குழு உறுப்பினர் மோகன் மற்றும் சசி, மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: