மன்னவனூரில் மக்கள் தொடர்பு முகாம்

கொடைக்கானல், ஜன. 10: கொடைக்கானல் மன்னவனூரில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி முன்னிலை வகித்தார். முகாமில் 4 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 6 குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா, 9 பேருக்கு ஆதிதிராவிட நல வாரிய அட்டை, 5 பேருக்கு புதிய ரேஷன்கார்டு, 6 பேருக்கு புதிய கியாஸ் இணைப்பு, 2 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலெக்டர் புதுபுத்தூர் ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். இதில் துணை ஆட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை துறை அலுவலர் ஜீனத் பானு, தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: