திண்டுக்கல் கோட்டத்திற்கு ரூ.6 கோடியில் 23 புதிய பஸ்கள்

திண்டுக்கல், ஜன. 10: திண்டுக்கல் கோட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 23 புதிய அரசு பஸ்கள் துவக்கி வைக்கப்பட்டன.திண்டுக்கல்லில் புதிய அரசு பேருந்துகள் இயக்க விழா நடந்தது.வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமை வகிக்க, மாவட்ட வருவாய் அலுவலர் வேலு முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் ராஜேஸ்வரன் வரவேற்றார். இதில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 23 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டன. இப்பேருந்துகள் மார்த்தாண்டம், பொள்ளாச்சி, திருச்செந்தூர், மூணாறு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், ராமேஸ்வரம், திருச்சி, கொடைக்கானல், தேவகோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளன.

Related Stories: