திருவேங்கடம், ஜன. 10: குண்டம்பட்டிைய சேர்ந்தவர் விவசாயி ஜேசுராஜ் (54). நேற்று முன்தினம் இவர், திருவேங்கடத்தில் பொருட்கள் வாங்கி விட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது டிரைலர் லாரி மோதி காயமடைந்தார்.இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் ஆன்டோ ரவிபாண்டியன்(34) என்பவரை கைது செய்தனர்.