பெருங்கோட்டூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

சங்கரன்கோவில், ஜன. 10: நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் பெருங்கோட்டூரில் ‘‘மக்களை சந்திப்போம், சொல்வோம், வெல்வோம்’’ என்ற தலைப்பில் திமுக தலைவர் அறிவித்த ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். குருவிகுளம் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, சேர்மத்துரை, மாவட்ட இளைஞரணி ராஜதுரை, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் குழந்தை தமிழரசன் கலந்து கொண்டு பெருங்கோட்டூர்  மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார். குறைகளை அனைத்தும் திமுக தலைவரிடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு குமார், விவசாய தொழிலாளரணி அஜய் மகேஷ்குமார், திமுக ஊராட்சி நிர்வாகிகள் கோவிந்தன், நாகேந்திரன், சங்கரய்யா, வேல்ராஜ், செல்லபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: