கடையம் அருகே சிதிலமடைந்த நிழற்குடையால் பயணிகள் பீதி

கடையம், ஜன. 10: கடையம் அருகே சிதிலமடைந்து காட்சியளிக்கும் பயணிகள் நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி புதிய நிழற்குடை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கடையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் மாதாபுரம் உள்ளது. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பயணிகள் நிழற்குடையை மாதாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் நிழற்குடை மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து அடிக்கடி விழுகின்றன. நிழற்குடை முன்பகுதி சிலாப் சிமென்ட் காரைகள் விழுந்து கம்பிகள் ஆங்காங்கே வெளியே தெரிகின்றன. மேலும் பயணிகள் நிழற்குடை மேற்கூரையில் மழைநீர் தேங்கி பலமிழந்தும் காணப்படுகிறது. இதனால் மக்கள் பீதியுடன் பயணிகள் நிழற்குடையில் அமராமல் சாைலயோரமாக நின்றபடி பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். எனவே இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படும் பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு இப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: