திருவேங்கடம், ஜன. 10: திருவேங்கடம் அருகே உள்ள சின்னகாளாம்பட்டி காலனியை சேர்ந்தவர் தங்க மாரியப்பன் மகன் ராஜதுரை (22). கூலி தொழிலாளியான இவர், ஒரு சமுதாய பிரமுகர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு செய்தி பரப்பியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட நபர், இதுகுறித்து சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்து சங்கரன்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்.