பேரணாம்பட்டு அருகே பெயிண்டர் தற்கொலை

பேரணாம்பட்டு, ஜன.10: பேரணாம்பட்டு, பாகர் உசேன் தெருவை சேர்ந்தவர் விஜய்(25), பெயிண்டர், இவரது மனைவி வினிதா, இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கடந்த சில தினங்களாக விஜய் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இவர் வேலைக்கு செல்லவில்லையாம், இதனால், வினிதா மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதில் விரக்தியடைந்த விஜய் மதியம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயன்று மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பேரணாம்பட்டு எஸ்ஐ பாலுவெங்கட்ராமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: