×

காட்பாடியில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

வேலூர், ஜன.10: காட்பாடி அடுத்த இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(40), தொழிலாளி. அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவம் பார்க்க அக்கம் பக்கம் கடன் வாங்கினாராம். தொடர் சிகிச்சை பெற்றும் குணமாகாததாலும் கடன் தொல்லையாலும் மனமுடைந்த மோகன் கடந்த 6ம்தேதி விஷம் குடித்துள்ளார். வீட்டில் மயங்கிக்கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Worker suicide ,Katpadi ,
× RELATED டாஸ்மாக் பார் அருகே பிளாக்கில் விற்க...