×

தனிநபர் கழிப்பிடம் முறைகேடு கிராம மக்கள் எஸ்பியிடம் புகார் மனு

அரியலூர், ஜன.3:  தனிநபர் கழிப்பிடம் முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்ய கோரி கிராம மக்கள் அரியலூர் எஸ்பியிடம் மனு அளித்தனர். அரியலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசனிடம், செந்துறை வஞ்சினாபுரம் கிராமமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பிரதமரின் சிறப்பு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வஞ்சினாபுரம் ஊராட்சியில் தனிநபர் கழிப்பிடம் கட்டாமலேயே கட்டி விட்டதாக முறைகேடு செய்து பணம் பெற்றுவிட்டதாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

Tags : Toilet Officers ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...