×

பணியில் இறந்த வாரணவாசி ராணுவ வீரருக்கு முன்னாள் முப்படை வீரர்கள் சங்கம் சார்பில் மரியாதை

அரியலூர், டிச. 25: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வாரணாசி கிராமத்தை சேர்ந்த பாலு என்ற ராணுவ வீரர் பணியில் இருந்த போது இறந்தார். அவரது நினைவு தினம் அரியலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வாரணாசியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு,  சங்கத்தின் ஒன்றிய தலைவர் மூர்த்தி தலைமையில், செயலாளர் நடராஜன், பொருளாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி, வீரவணக்கம் செலுத்தி மரியாதையும், மவுன அஞ்சலியும் செலுத்தினர். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Tags : officer ,Warangaswi ,Army ,soldiers ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்